5. முதல் உலகப்போர்
யங் டர்க்ஸ் ஆட்சி அமைத்த பிறகும் ஓட்டோமானின் நிர்வாகப் பகுதிகள் சுருங்கிக் கொண்டே வந்தன. பால்கன் பகுதியில் அல்பேனியா, கொசோவோ போன்ற பகுதிகளை ரஷ்யாவிடம் இழந்திருந்தனர். அதற்கு முன் எகிப்தைப் பிடுங்கிக் கொண்டது பிரிட்டன்.
முதலாம் உலகப் போர் துவங்கியது. ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகள் ஓரணியில் திரண்டன. இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி ஆகியவை இன்னொரு பக்கம். எந்தவித யோசனையும் இன்றி ஜெர்மனின் அணியில் நின்றது ஓட்டோமான். ஜெர்மனி செய்த உதவிகளைத் திரும்பக் கொடுக்க வேறு வழி இருக்கவில்லை.
எந்த ராணுவப் பலவீனம் மாம்லுக்குகளை வீழ்த்தியதோ, அதே நிலைக்கு ஓட்டோமானும் வந்து சேர்ந்திருந்தது. மோசமான பொருளாதாரத்தால் ராணுவத்தை அவர்களால் நவீனப்படுத்த முடியவில்லை.









Add Comment