தென் கொரியா. தமிழ்நாட்டிலிருந்து ஐயாயிரம் கிலோமீட்டர் அப்பால் உள்ள நாடு. அங்கிருப்பவர்களுக்கு தமிழ் தெரியாது, அவர்கள் முட்டைக் கலக்கி சாப்பிடுவதில்லை, பாண்டியன் ஸ்டோர்ஸும், சிறகடிக்க ஆசையும் பார்ப்பதில்லை. ஆனால் அங்கே தயாரிக்கப்படும் தொலைக்காட்சித் தொடர்களை இங்கிருக்கும் தமிழர்கள் வெறித்தனமாகப் பார்க்கிறார்கள்.
ஏன் இப்படி? இது எப்படி, எங்கிருந்து தொடங்கியது?
இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் மணிப்பூரில் உள்ள மக்கள் புரட்சி இயக்கம் அங்கே இந்தி சினிமாக்களுக்குத் தடை விதித்தது. அப்போது ஏற்பட்ட பொழுதுபோக்கு வெற்றிடத்தை கொரியத் தொடர்கள் (சுருக்கமாக கே-தொடர்கள்) நிரப்பின. அங்கிருந்து அது மற்ற வடகிழக்கு மாநிலங்களுக்கும் பரவியது.















Add Comment