இந்திய ரத்தம். இந்திய நிறம். சிந்தனையும், ரசனையும், ஒழுக்கமும் ஆங்கிலேய ரகம். இப்படியான ஒரு ஜனத்திரளை உருவாக்குவதே நம் கல்விக் கொள்கை.
தாமஸ் பாபிங்டன் மெக்காலே எழுதிய இந்தக் குறிப்பு, பல கோடி இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றியது. 1835ஆம் ஆண்டு ‘மெக்காலே குறிப்பு’ என்னும் பெயரில் வெளிவந்த இவ்வறிக்கை, நம் பாரத தேசத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை.
இந்திய அறிதல் முறைகள் மீது கிஞ்சித்தும் மதிப்பற்றவராக இருந்தார் மெக்காலே. நல்லதொரு ஐரோப்பிய நூலகத்தின் ஒரே ஒரு அலமாரி போதும். ஒட்டுமொத்த இந்திய அறிவைவிட அதன் மதிப்பு பன்மடங்கு அதிகம் என்றார்.















Add Comment