குழந்தை கடத்தல் ஒரு கொடூரக் குற்றம். ஆனால் இதன் காரணங்கள் வெவ்வேறு நாடுகளில் முற்றிலும் வேறுபடுகின்றன. இந்தியாவில் குழந்தைகள் ஏழ்மைக்குப் பலியாகும்போது, அமெரிக்காவில் பணக்காரர்களின் பேராசையே குழந்தைகளைச் சுரண்டுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு எட்டு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை காணாமல் போகிறது. குறைந்தது 1.1 கோடி குழந்தைகள் கட்டாயத் தொழிலாளர்களாக உள்ளனர். ஏழ்மையே இதற்கு முக்கிய காரணம். பெற்றோர்கள் வறுமையால் குழந்தைகளை விற்கின்றனர். உணவுக்காகக் குழந்தைகள் உடலை விற்க நிர்பந்திக்கப்படுகின்றனர். கல்வியின்மை காரணமாக ஏமாற்றப்படுகின்றனர்.
இவர்கள் செங்கல் சூளைகள், விவசாயம், வீட்டு வேலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். மேற்கு வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இது அதிகம் நடக்கிறது. 2019இல் 3,466 குழந்தைக் கடத்தல் வழக்குகள் பதிவாகின.














Add Comment