1. எந்தப் பணிகளைப் பகிர்ந்து கொடுப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லாப் பணிகளையும் அடுத்தவரிடம் ஒப்படைக்க முடியாது.. எடுத்துக்காட்டாக, செயல்திறன் மதிப்புரைகள் அல்லது ஏதேனும் தனிப்பட்ட விஷயங்களை நீங்கள் கையாள வேண்டும்.
இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவனிடம் விடல் என்று சொல்கிற குறள் வழி, எந்த வேலையை யார் செய்தால் நன்றாக இருக்கும், அவர்களால் அதைத் திறம்பட முடிக்க முடியுமா எனவும் தெரிந்து கொள்ளுதல் முக்கியம். வீட்டில் கூட சில வேலைகளைத்தான் குழந்தைகளும் சில வேலைகளைத்தான் பெற்றோர்களும் செய்ய முடியும். அவர்கள் வயது, திறன், உடல்நலம் ஆகிய யாவற்றையும் ஆராய்ந்தே பணிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, சரியான காரியங்களைச் சரியான நபரிடம் கொடுப்பது, அதற்கான அவர்களின் பலம், பலவீன, திறன்களை அறிந்து கொள்ளுதல் முக்கியம். அதேபோலச் சில காரியங்களை நீங்களே செய்தால்தான் சிறக்கும்.















Add Comment