Home » குற்றமும் தண்டனையும்
நம் குரல்

குற்றமும் தண்டனையும்

பொள்ளாச்சி சம்பவம்: குற்றவாளிகள்

பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஒன்பது குற்றவாளிகள் சாகும்வரை ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். ஆளும் கட்சியும் முன்னர் ஆண்ட கட்சியும் நீதி நிலைநாட்டப்படத் தாங்களே காரணம் என அறிக்கைப் போர் நடத்துகிறார்கள். இவ்வழக்கை முடக்குவதற்கு நடந்த அத்தனை முயற்சிகளையும் எதிர்கொண்டு புகார் அளித்த பெண்களும், அவர்களுக்குத் துணையாகத் திரண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் பொதுமக்களும் போராடிப் பெற்ற நீதி இது.

பத்தொன்பது வயதுப் பெண் ஒருவர், தனக்கு அறிமுகமான ஆண் நண்பர் சபரி ராஜன், தொலைபேசியில் அழைத்ததையடுத்து அவரைச் சந்திக்கச் சென்றார். முக்கியமான விஷயம் பேச வேண்டும் எனச் சொன்னதை நம்பி காரில் ஏறினார். காரை ஓட்டியது திருநாவுக்கரசு. வேறு சில ஆண்களும் ஏறியதைத் தொடர்ந்து கத்திக் கூப்பாடு போட ஆரம்பித்தார். அப்பெண்ணின் ஆடைகளைக் களைந்து வீடியோ எடுத்து அத்துமீறலில் ஈடுபட்டு அவரைப் பாதி வழியில் இறக்கிவிட்டனர்.

வீடியோவை வெளியிடுவோம் எனச் சொல்லித் தொடர்ந்து மிரட்டித் தங்கள் பாலியல் இச்சைகளுக்கு உடன்பட வலியுறுத்தினர். ஒரு கட்டத்தில் அப்பெண் தன் வீட்டில் தெரிவிக்க, சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடிக் கண்டுபிடித்து அடித்து உதைத்தார் அப்பெண்ணின் அண்ணன். செல்போன்களையும் கைப்பற்றினார். அதில் மேலும் பல வீடியோக்கள் இருந்ததையடுத்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!