நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பட்டியல் கவனம் ஈர்க்கிறது. சைவ மட்டன் குழம்பு, சைவ சிக்கன் 65, சைவ மீன் வறுவல், சைவ இறால், சைவ குடல் குழம்பு என்றெல்லாம் உணவு வகைகளைப் பார்க்க நேரிடுகிறது. முதன்முதலாக இதனைப் பார்த்தபோது...
Tag - உணவு
சென்னை உணவுத் திருவிழா டிசம்பர் 20 முதல் 24ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்குபெற்ற முதல் நிகழ்ச்சி இது. என்னென்ன உணவுகள் இருந்தன? ஏற்பாடுகள் எப்படிச் செய்யப்பட்டிருந்தன? என்பதை...
இலேசான புளிப்பும், அளவான தித்திப்பும் முறுக்கு போல நறுக்கெனக் கடிபடும் தன்மையும் கொண்ட பண்டம் ஜிலேபி. மத்தியப் பிரதேசத்தின் காலை உணவில் ஜிலேபிக்கும் இடமுண்டு. தில்லியில் விற்கப்படும் பிரபலமான சாலை உணவு. திருமலை திருப்பதி கோயிலில் ஜிலேபியைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள் எனச் சொன்னாலும் நம்பிவிடுவோம்...
ஒரே நேர்க்கோட்டில் ஐந்து கோள்கள் வரிசைகட்டும் என்கிற நாசாவின் அறிவிப்பு கூட அவ்வப்போது வரும். ஆனால் எங்கள் வீட்டில் மூவரின் விடுமுறை நாள்களும் ஒன்றாக அமைவது அரிதினும் அரிது. அப்படி அரிதாகக் கிடைத்த விடுமுறையை இந்த வருடம் பாரீஸில் கொண்டாடினோம். திகட்டத் திகட்ட பிரெஞ்சுப் புரட்சியையும்...
20. உயிர்த் தீயினிலே வளர் சோதி யோசித்துப் பார்த்தால், இரண்டு விஷயங்கள் சார்ந்த வியப்பு உலகமுள்ள வரை தீரவே தீராது. முதலாவது சுவாசிப்பது. இரண்டாவது உணவு தேடுவது. பசி என்ற உணர்ச்சி இருக்கும்வரைதான் உயிர்கள் எதையாவது செய்துகொண்டிருக்கும். அது இல்லை என்றாகிவிட்டால் ஒன்றும் செய்யவேண்டிய அவசியம் இருக்காது...
தோசை மாவு புளித்துப் போனால் பணியாரமாக சுட்டுக் கொள்ளலாம். அடைமாவில் குணுக்கு போடலாம். வாங்கிய பிரட் மிச்சமாகி விட்டதென்றால்? அதை அப்படியே பாலில் தோய்த்துத் தின்னலாம்தான். ஆனால் அடியிலும் நுனியியிலும் பிரவுனாக இருக்கும் பிரட்டைப் பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. அதையும் வீணாக்காமல் தூளாக்கி ஒரு...
அல்வா. நாக்கில் ஒட்டிக்கொள்ளும் தித்திப்பு. கையில் ஒட்டாத வழவழப்பு. திருநெல்வேலி அல்வா, கோதுமை அல்வா, அசோகா அல்வா என எல்லா வகை அல்வாக்களுக்கும் நெய்யும் சர்க்கரையும்தான் அஸ்திவாரம். சர்க்கரை தூக்கலாகப் போட்டு நெய்யைத் தாராளமாக விட்டால்தான் வழுக்கிக்கொண்டு விழும் அல்வா பதம் கிடைக்கும்...
தூங்காத நகரம் என்று மதுரையைச் சொல்வதுண்டு. பசிக்காத நகரம் என்று சேலம் மாவட்டத்தைத் துணிந்து சொல்லலாம். அந்த அளவுக்கு வகைவகையான உணவுகளுக்குப் பெயர்போனது சேலம் மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான உணவு மிகப்பிரபலம். அந்த வகையில், அம்மாப்பேட்டை பகுதியில் அன்னதாதாவாக இருந்து...
புசுபுசுவென மாவு பொங்கி, பந்துபோல உருண்டு வந்தால் இட்லி. அதுவே கொஞ்சம் நீர்த்துப் போனால் தோசை. புளித்துப் போனால் அதை ஈடுகட்ட வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு ஊத்தப்பமாகவோ பணியாரமாகவோ ஊற்றிக் கொள்ளலாம். இதுதான் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறை. இதுவே அடை மாவு மீந்து போனால்...
கோவை டவுன் ஹால் பகுதியில் மாநகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள துருகாலால் ஊறுகாய்க் கடை 1930-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொண்ணுற்று நான்கு வயதாகும் இந்த ஊறுகாய்க் கடையை இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த எழுபத்து நான்கு வயது ரமேஷ்லால் நடத்தி வருகிறார். இவருடைய குலத்தொழில் இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பது...