இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தைத் தவிர அத்தனை சிறப்புச் சலுகைகளையும் பறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிகு சட்ட வரைவு இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ‘முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ஒழிப்பு’ என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசு...
Tag - இலங்கை
பொதுநிதியைத் தன் தனிப்பட்ட லண்டன் பயணத்திற்குப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எனப்படும் சிஐடியால் ஆகஸ்ட் 22ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இலங்கையின் சரித்திரத்தில் முதன்முறையாக நடைபெறும் ஒரு அரசத் தலைவரின்...
மார்ச் 2023. இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் ஓர் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது. குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம பகுதியில் உள்ளது மூவாகந்த எனும் தோட்டம். அதில் வசிக்கும் ஜீவரட்ணம் சுரேஷ்குமார் எனும் இளைஞர்தான் இந்த மனுவைத் தாக்கல் செய்தவர். தனக்கும், தான் வாழும் ஊர் மக்களுக்கும் நிரந்தர...
அநுரகுமார திஸாநாயக்க, சகல அதிகாரமும் அமையப் பெற்ற ஜனாதிபதிப் பதவியில் அமர்ந்து எட்டு மாதங்களும், அவரது ஜே.வி.பி கட்சி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு என்ற அதீதப் பலத்துடன் ஆட்சி அமைத்து ஆறு மாதங்களுமாகின்றன. ஊழல் ஒழிப்பு, வீண் விரயமில்லாத சிக்கனமான நிர்வாகம்...
காற்றாலை மின்சார அதிபதியாய் பெரும் தடபுடலாய் முதலீடு செய்ய முனைந்த அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி, திடீரென்று இலங்கைக்கு கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கோட்டாபய ராஜபக்சே அரசு, அதானிக்கு இலங்கையின் வடபகுதியான மன்னார் மாவட்டத்தில்...
ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இன்றைக்குச் சரியாக மூன்று மாதங்கள் ஆகின்றன. மூன்றில் இரண்டு பலத்துடன் அவரது கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு மாதம் ஆகிறது. இந்தக் குறுகிய காலத்தில் அரசின் போக்கைப் பார்க்கும் போது கலவையான விமர்சனங்களும், நிறைய நல்லெண்ணங்களும், ஏராளமான...
அந்தச் செய்தி இலங்கை சுற்றுலாத்துறைக்கு இடியாய் இறங்கிய தினம் அக்டோபர் 23. ‘அருகம்பை’ எனப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் சுற்றுலாச் சொர்க்கபுரியில் இருந்து தம் பிரஜைகளை வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் அப்படி ஒரு நான்காம் தர எச்சரிக்கை அறிக்கையை விடுக்கும் என்று...
எண்பத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு ராஜபக்சே குடும்பத்தின் வாரிசுகள் எவரும் போட்டியிடாத பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ம் தேதி நடக்க இருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்தே எழுபத்தாறு வருடங்கள் தானே ஆகிறது, அதெப்படி எண்பத்தெட்டு என்ற கேள்விக்குப் பதில் தான் சுதந்திரத்திற்கு முன்னரான வெள்ளைக்கார ஆட்சியில்...
இது ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்று வெற்றிகரமான இரண்டாவது வாரம். சந்தேகமே இல்லை. ஆக்சன் திரைப்படம் தான், கமர்ஷியல் மஷாலா தான் என்று தான் ரசிகப் பெருமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.காரணம் ஜே.வி.பி இன் பின்புலம் என்பது அதிரடி, சரவெடி பட்டாசு போன்றது. அதுமட்டுமல்ல, மேடை தோறும் அநுரவும், அவர்...
“பள்ளிக் கூடங்களில் நிகழும் எந்த உற்சவத்துக்கும் இனிமேல் அரசியல்வாதிகளை அதிதியாக அழைக்கக் கூடாது” பதவியேற்ற இரண்டாவது நாளே பட்டையைக் கிளப்பியிருக்கிறார் பேராசிரியை ஹரிணி அமரசூரிய. இவர் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர். என். பி . பி கட்சியின் அநுர குமார திஸாநாயக்க அதிபராக நியமனம் பெற்றதன் பின்னர்...













