அசோக் எல்லுசாமி
எதிர்காலத் தொழில்நுட்பத்தை முன்கூட்டியே சிந்திக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர் எலான் மஸ்க். இன்றைய தேதியில் உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர். அவரிடமிருந்து தமிழர் ஒருவருக்குப் பலமுறை பாராட்டுகள் கிடைத்திருக்கின்றன. அட! என உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த அந்தத் தமிழரின் பெயர் அசோக் எல்லுசாமி.
‘தானியங்கி வாகன மென்பொருளுக்கான குழுவை அமைக்கவிருக்கிறோம். ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்க’. 2015ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் இந்த ட்வீட் பல திறமையாளர்களை டெஸ்லாவுக்குக் கொண்டு வந்து சேர்த்தது.
தற்போது சான்ஃபிரான்சிஸ்கோவில் வசிக்கும் அசோக் எல்லுசாமி, டெஸ்லா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் துணைத் தலைவராக இருக்கிறார். டெஸ்லா கார்களின் ஆன்மாவாக இருக்கும் ‘ஆட்டோபைலட்’ மென்அசோக் எல்லுசாமிபொருள் பிரிவைத் தலைமையேற்று வழிநடத்துகிறார்.









Add Comment