Home » 100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!
உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக் குறிக்கப்பட்டு, பழிவாங்கும் உறுதியுடன் அதிபரான டொனால்ட் டிரம்ப், பெரும் வாக்குறுதிகளுடன் பதவியேற்றார். ஆனால் அவரது பல முயற்சிகள் நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு கட்டுப்பாடுகளால் தடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் மூன்று அதிகார மையங்களுக்கும் (நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை) இடையே கடுமையான பதற்றம் நிலவுகிறது. மக்கள் பிரதிநிதிகள் அவையில் டிரம்ப்பின் ஒவ்வொரு முன்மொழிவுக்கும் கடும் எதிர்ப்பு எழுகிறது. பல மாநில நீதிபதிகள் அதிபரின் உத்தரவுகளுக்குத் தொடர்ந்து தடை விதித்து வருகின்றனர். இந்த நிலைமை அமெரிக்க அரசியலமைப்பின் சிக்கலான அதிகாரப் பகிர்வு முறையை வெளிப்படுத்துகிறது.

வெளித்தோற்றமும் யதார்த்தமும்

டிரம்ப் நிர்வாகம் அமெரிக்கத் தேசிய சின்னங்களையும், ஆடம்பரமான வெளிப்புறத் தோற்றத்தையும் முன்னிலைப்படுத்துகிறது. வெள்ளை மாளிகை முழுவதும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அமெரிக்கக் கொடியின் நிறங்களிலான உடைகளையும், விலையுயர்ந்த அணிகலன்களையும் அணிகின்றனர். இந்த ஆடம்பரம் உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் செலென்ஸ்கியின் எளிமையான தோற்றத்துடன் பெரும் வேறுபாட்டைக் காட்டுகிறது. இந்த வித்தியாசமே அவருடைய அமெரிக்க வருகையின்போது பலத்த விமர்சனங்களுக்குக் காரணமாகியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!