நல்ல, அருமையான, நிறைய பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய பெரிய விளையாட்டு மைதானம். ஆப்கனிஸ்தானின் ஃபரா மாகாணத்தில் உள்ளது. விழா அங்கேதான் ஏற்பாடாகியிருந்தது. அரசாங்கமே நடத்துகிற விழா என்பதால் ஆரவாரம் சிறிது அதிகம். நீதிபதிகள், அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், மாநிலம் முழுதும் உள்ள நிர்வாக அதிகாரிகள் ஒரு பக்கம் நிறைந்திருந்தார்கள். மறுபுறம் திருவிழாவைக் காண்பதற்காக ஆயிரக் கணக்கில் பொது மக்களும் மைதானத்தில் கூடியிருந்தார்கள். எத்தனை காலம் ஆகிவிட்டது அக்காட்சியை நேரில் கண்டு! பழைய தாலிபன் ஆட்சிக் காலத்தில் கண்டது. அதன்பின் இல்லை. அதே தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் (அக்குன்ஸதா பொறுப்புக்கு வந்தது ஆகஸ்ட் 15, 2021) இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
சிங்கப்பூர் மக்கள் பாகுபாடு பார்ப்பவர்கள் அல்லர். எல்லா இனத்தவர்களும் இணக்கமாக வாழ்கிற நாடு என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு...
அரசை எதிர்த்து மக்கள் அமைதிப் போராட்டத்தைத் தொடங்கினர். ஹயான் பிறந்த ஊரான 'தாராவில்' தான் அந்தத் தீப்பொறி உருவானது. அவர் குடும்பமும் அந்தப்...














Add Comment