தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கிழக்காசிய நாடுகளில் உருவான நிதி நெருக்கடியால் பல நூறு பில்லியன் டாலர்கள் உலகப் பொருளாதாரத்திலிருந்து காணாமல் போயின. வளர்ந்த நாடுகள் பலவும் ஆசியாவின் வளரும் நாடுகளில் பெருமளவு முதலீடு செய்திருந்த காலமது. கணக்கு வழக்கு இல்லாமல் கடனை வாங்கிக் குவித்தன ஆசிய நாடுகள். கடன் சுமை தாங்க முடியாத கட்டத்தை எட்டியபோது மோசமான பின் விளைவுகள் தாய்லாந்திலிருந்து வெளித்தெரிய ஆரம்பித்தன. அது கிழக்காசியாவின் மற்ற நாடுகளுக்கும் பரவியது. உலக நாடுகளின் பங்குச் சந்தைகளும் ஆட்டம் கண்டன.
இதைப் படித்தீர்களா?
தெரிந்துகொள் வீரனே. உண்மை பேசுபவனுக்கு அச்சமென்ற ஒன்றில்லை. அவமானமென்ற ஒன்றில்லை. அடுத்தவர் என்ன நினைப்பாரென்ற அக்கறை ஏதுமில்லை.
பூசை முடித்துவிட்டு அருமொழி திரும்பிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. சார்வாகன் இருந்த இடத்திலிருந்து கோயிலின் வாயில் தென்பட்டதே தவிர வேறெதுவுமே...















Add Comment