தினமும் 20 சிகரெட்டுக்களுக்கு மேல் புகை பிடிப்பதும், 5 பாட்டில்களுக்கு மேல் மது அருந்துவதும் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும், நோய்க்கான அறிகுறிகள் தெரியவந்தும், படி ஏறியிறங்கும் போது மூச்சிரைத்தும், புற்றுநோய் என்று ஒரு நாள் மருத்துவர் சொல்லும் போது அதிர்ச்சி வந்து, ‘எனக்கா இப்படி, ஏன்?’ என்று அதிர்ச்சி காட்டும் மனநிலை ஒன்று. சர்க்கரை அதிகமாக உள்ள இனிப்புகளை ஏராளமாகத் தினம் அள்ளித்தின்றுவிட்டு, நீரிழிவு நோய் என்று சொல்லப்பட்ட பின்னும் கட்டுக்கடங்காமல் ஐஸ்க்ரீமும் இனிப்புமாய் வாரித் தின்றுவிட்டு, மயங்கி விழும் போது, ‘எனக்கு ஏன் சுகர் 500-ஐத் தொட்டதென்று தெரியவில்லை’ என்று நிந்தனை செய்துகொள்வதைப் போல ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து தொழில்நுட்பத்துறையில் வேலை நீக்கம் பற்றிய செய்திகளைப் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுகின்றன.
இதைப் படித்தீர்களா?
கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.
மூன்று ஒற்றர்களும் ஒன்றாகப் புறப்பட்டுச் செல்கிறார்கள் என்றால் அதைத் தவிர்ப்பதற்கில்லை. என் கவனத்தைப் பூரணமாக நீலக்கிளியின் சிந்தையில் வைத்தேன்.















Add Comment