மோசமான நிதிப் பிரச்சனைகளில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறது பாகிஸ்தான். மக்களின் பொருளாதார நிலை குறித்த அதிகாரப்பூர்வக் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார் அந்நாட்டின் திட்ட அமைச்சர் அஹ்சன் இக்பால். அதன்படி, நாட்டின் மக்கள் தொகையில் இருபத்தொன்பது சதவீதம் பேர், அதாவது கிட்டத்தட்ட ஏழு கோடிக்கும் அதிகமானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் சென்றிருக்கின்றனர்.
2019இல் இந்தப் புள்ளிவிவரம் இருபத்தொரு சதவிகிதமாக இருந்த நிலையில், இன்றைய கணக்கு மிக மிக அதிகம். அதுமட்டுமில்லாமல் நாட்டின் ஏழு சதவீத மக்கள் வேலையின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த இருபத்தொரு ஆண்டுகளில் இதுவே மிக மோசமான எண்ணிக்கை.
கடந்த இம்ரான் கான் அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளே இந்நிலைக்குக் காரணம் என்றிருக்கிறார் அஹ்சன் இக்பால். தேசங்கள் மாறினாலும் அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகள் மாறுவதில்லை போல.















Add Comment