12. எகிப்து அழைக்கிறது
சிரிய ராணுவத்தில் நாசரின் செயல்பாடுகளை விரும்பாத பிரிவொன்று உருவானது. அவர்கள் பெரும்பாலும் உயர்குடியினரைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அந்தக் குழு டமாஸ்கஸில் இருந்த அரசுத் தலைமையகத்தைச் சுற்றி வளைத்தது. அங்கிருந்த எகிப்தைச் சேர்ந்த அதிகாரிகள் விரட்டப்பட்டனர்.
ராணுவ ஆதரவின்றி ஆட்சியைத் தக்கவைக்க முடியாதென நாசர் உணர்ந்தார். எனவே சிரியாவை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கைகள் எதிலும் அவர் ஈடுபடவில்லை.
மூன்றே ஆண்டுகளில் யூஏஆர் கலைந்தது. சிரியாவும் எகிப்தும் மீண்டும் தனித்தனி நாடுகளாகின.










Add Comment