இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள அந்தக் காட்டிலிருந்து பாப்பா ராவ் வெளிப்பட்டார். கட்டம் போட்ட நிறம் மங்கிய சட்டை, புழுதி படிந்த கால்சட்டை, தேய்ந்து போன விளையாட்டுக் காலணி அணிந்திருந்தார். தோளில் ஒரு துப்பாக்கியைத் தொங்கிவிட்டிருந்தார். அவரது தலைக்கு இருபத்தாறாயிரம் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
அவருக்குப் பின்னால், முப்பது ஆண்டுகளுக்கு மேல் பழைமையான எல்1ஏ1 மற்றும் லீ-என்ஃபீல்டு துப்பாக்கிகளைச் சுமந்து கொண்டு ஒரு சிறு படை வந்து கொண்டிருந்தது. அவர்கள் செருப்பு அணிந்திருந்தார்கள். பூமா முத்திரையிடப்பட்ட பைகளை முதுகில் சுமந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள்தான் உலகின் கடைசி மாவோயிஸக் கிளர்ச்சியாளர்கள். இருபதாம் நூற்றாண்டில் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடிய ஓர் உலகளாவியப் புரட்சி இயக்கத்தின் வாரிசுகள். அவர்களும் இப்போது சரணடைவதற்கான பாதையில் வந்து கொண்டிருந்தார்கள்.
















Add Comment