22. துப்பாக்கி ஏந்திய புரட்சி
அந்தச் சிறுவர்களை விடுவிக்கக் கோரி சிரியாவின் பிற பகுதிகளிலும் கோரிக்கை எழுந்தது. துனீசியா, எகிப்தைப் போலவே சிரியாவும் அரபு வசந்தத்துக்கு ஆயத்தமாகிறது என்பதை அசாத் உணர்ந்தார்.
அந்தச் சிறுவர்களில் சிலர் மட்டும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதன்மூலம் போராட்டங்கள் நின்றுவிடும் என நினைத்தது அரசு.
வெளிவந்த சிறுவர்களின் நிலை மோசமாக இருந்தது.. உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட காயங்கள். விரல்களில் நகங்கள் இல்லை. அவர்களுடைய இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. அவற்றைக் கண்ட சிரிய மக்கள் இன்னும் ஆத்திரமடைந்தனர்.
டமாஸ்கஸ், அலெப்போ, ஹோம்ஸ் என பிற நகரங்களிலும் கூடிய மக்கள், அசாத் அரசுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். அப்போதும் கூட சில பல்டிகளை அடித்துப் பார்த்தார் அசாத்.









Add Comment