54. சொன்னதும் சொன்னவனும்
அந்த விளையாட்டை ரசித்தேன். அவனுக்குக் கொல்லும் அளவுக்குச் சீற்றம் இல்லை. தன் முயற்சி நிச்சயமாக வெற்றி பெறாது என்பதையும் அவன் அறிந்திருந்தான். இருப்பினும் ஆவேசமாகப் பாய்ந்து கருவூர்ச் சித்தரின் கண்டத்தில் தனது இரண்டு கரங்களையும் பதித்து அழுத்திக்கொண்டிருந்தான். சித்தர் அசையவில்லை. முனகவில்லை. வளையவோ, நெளியவோ இல்லை. அவரது கண்கள் திறந்தே இருந்தன. இமைக்கவும் இல்லை. எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அவன் கொன்று முடிப்பதற்காகக் காத்திருக்கும் தோரணையில் அமர்ந்திருந்தார்.
அவன் நெடுநேரம் முயற்சி செய்துவிட்டுச் சோர்வுடன் நிலத்தில் அமர்ந்தான். குடிக்க நீர் வேண்டும் என்று கேட்டான். உதுமானி நாயனார் அங்கிருந்த மண் பாண்டத்தை எடுத்து அவனிடம் நீட்டினார். அவன் வாங்கிப் பருகி வைத்ததும்,
முன்னொரு சமயம் நீ அருந்தி வைத்த குடுவையில் தண்ணீர் தானாக நிரம்பியது எப்படி என்று தெரியுமா?










Add Comment