26. மீண்டும் அசாத்
2015இன் பாதியில், கிட்டத்தட்ட சிரியாவை இழந்துவிடும் நிலைக்கு வந்திருந்தார் அசாத். சிரியாவின் கால்வாசிப் பகுதிகள் மட்டுமே அவர் வசம் இருந்தன.
ஐஎஸ்ஐஎஸ் கொஞ்சம், அல் நுஸ்ரா கொஞ்சம், குர்த்கள் கொஞ்சம், FSA கொஞ்சம் என அவரவர் பலத்துக்குத் தகுந்தபடி அரசுப் படைகளிடமிருந்து இடங்களைக் கைப்பற்றி வைத்திருந்தனர்.
மூன்று லட்சமாக இருந்த அரசுப் படைவீரர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாக ஆகியிருந்தது.
தலைநகரமான டமாஸ்கஸை மட்டும் இழந்துவிடாமல் போராடிக் கொண்டிருந்தார் அசாத். ஆனால் அரசின் நிலைமை கவலைக்கிடமாகவே இருந்தது. ஆண்டுக்குப் பதினைந்து பில்லியன் டாலர் வரை கொடுத்து உதவிக் கொண்டிருந்தது இரான். அதுவும் கூட மக்களுக்காகச் செலவழிக்கப்படாமல், பெரும்பான்மையான பணம் ராணுவத்துக்கே செலவழிக்கப்பட்டது.











Add Comment