Home » எரியாத நாளில்லை – 30
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 30

30. புதிய சிரியா: நிஜமான விடியல்?

2025 ஜனவரியில் HTS தலைமையிலான சிரியப் புரட்சி வெற்றி மாநாடு நடத்தப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, சிரியாவின் இடைக்கால அதிபராக ஜுலானி என்ற அஹ்மத் அல்-ஷரா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012இல் அசாத்தால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தைத் தகுதிநீக்கம் செய்தார் அல்-ஷரா. அதற்குப் பதிலாகப் புதிய அரசியலமைப்பு பிரகடனம் வெளியிடப்பட்டது.

2030ஆம் ஆண்டு ஜனநாயக முறையிலான வாக்கெடுப்பு சிரியாவில் நடத்தப்படும் என்றது இடைக்கால அரசு. அதுவரை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அல்-ஷரா அதிபராகத் தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.

சுன்னி இன ஆதிக்க அரசாக இது இருக்குமென்ற மக்களின் சந்தேகத்தைக் களைந்தார் அல்-ஷரா. அவரது புதிய அமைச்சரவையில் கிறிஸ்துவர்கள், அலவைட்கள், த்ரூஸ், குர்த் என அனைத்துச் சிறுபான்மையினருக்கும் பிரதிநிதித்துவம் இருந்தது. மொத்தமிருந்த இருபத்தி மூன்று அமைச்சர்களில் பெண் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!