பதினெட்டு வயதில் தென் துருவத்தை அடைந்த இளம் இந்தியர் என்ற சாதனை படைத்திருக்கிறார் காம்யா கார்த்திகேயன். இச்சாதனையைப் புரிந்த உலகின் இரண்டாவது இளம் வீராங்கனை இவர். பிரதமர் நரேந்திர மோடி காம்யாவுக்குத் தன் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.
இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் காம்யா. அவரது தந்தை கார்த்திகேயன் இந்தியக் கடற்படையில் கமாண்டராகப் பணிபுரிகிறார். கார்த்திகேயன் மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர். தன் மகளையும் அதில் ஈடுபடுத்த முடிவு செய்தவர், சிறுவயதிலிருந்தே அதற்கான பயிற்சிகளை அளிக்கத் தொடங்கினார். மூன்று வயதில் தந்தையின் உதவியுடன் மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறு மலையேற்றத்தில் ஈடுபட்டார் காம்யா.
பின் ஏழு வயதில் உத்தரகாண்ட் இமயமலைப் பகுதியில் இருக்கும் சந்தரஷீலா சிகரத்தை எட்டினார்.













Add Comment