கோவை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான அவினாசி சாலை மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
கோயம்புத்தூர், தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம். மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான கோவையைத் தலைநகராகக் கொண்டு 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் உருவாக்கியது. அதற்கு முன்பிருந்தே வர்த்தக மையமாக விளங்கிய கோவை, இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு நெசவுத் தொழிலில் மிகப் பெரிய வளர்ச்சி கண்டது. இதனால் கோவைக்கு ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ என்ற பட்டப்பெயரும் உண்டு. அதோடு தமிழ்நாட்டின் சிறந்த கல்வி மையமாகவும் கோவை விளங்குகிறது.















Add Comment