Home » ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா: அனைவரும் வருக!
விழா

ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா: அனைவரும் வருக!

வாசக நண்பர்களுக்கு வணக்கம்.

மெட்ராஸ் பேப்பர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைகின்றன. எதிர்வரும் ஜூன் முதல் தேதி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். ஓர் இணைய வார இதழ் இன்றைய சூழலில் நான்காண்டுகளை இடையூறின்றிக் கடப்பது சாதாரண விஷயமல்ல. இதனைச் சாத்தியமாக்கிய உங்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மெட்ராஸ் பேப்பரின் ஐந்தாமாண்டுப் பயணத்தை ஒரு சிறிய விழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம். உலகெங்குமிருந்து நமது எழுத்தாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்னைக்கு வரவிருக்கிறார்கள். வாசகர்களாகிய நீங்கள் உடனில்லாமல் நிகழ்ச்சி எப்படிச் சிறக்கும்?

மே 31, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 1 மணி வரை சென்னை அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிறுத்தத்தை அடுத்துள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் (நூலக அரங்கம்) இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மெட்ராஸ் பேப்பர் வாசகர்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!