மக்களுக்குக் குறைந்த விலையில் ஜெனிரிக் மருந்துகளை விற்பனை செய்யும் முதல்வர் மருந்தகங்களைத் திறந்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் மக்களின் மாதாந்திர செலவில் கணிசமாக மிச்சமாகும்.
உலகளாவிய மருந்துச் சந்தையில் இந்தியா பதிமூன்று சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இதன் தொடக்கம் 1970ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த காப்புரிமைச் சட்டம். இதன்படி மருந்துப் பொருள்களுக்குக் காப்புரிமை வாங்க முடியாது. அதை உருவாக்கும் செய்முறை மட்டுமே காப்புரிமை விதியின் கீழ் வரும். எனவே செய்முறையில் சிறிய மாறுதலைச் செய்து புதிய காப்புரிமையுடன் ஏராளமான நிறுவனங்கள் மருந்துகளைத் தயாரிக்க ஆரம்பித்தன.
Add Comment