Home » ‘சரி. பிரிந்துவிடுவோம்!’
உலகம்

‘சரி. பிரிந்துவிடுவோம்!’

கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக் என்பது விவகாரம். அதை ஓர் இளவரசி செய்ததுதான் பரபரப்புக்குக் காரணமானது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவராகவும் துபாயின் அரசராகவும் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் இருக்கிறார். அவருக்கு எத்தனை மனைவிமார்கள் என்ற சரியான கணக்கு இல்லை. நான்கு என்றும் ஆறு என்றும் செய்திகள் உள்ளன. அவரது இருபத்தாறு குழந்தைகளுள் ஒருவர் ஷேக்கா மெஹ்ரா. ஆண் குழந்தைகளில் எப்படி இளவரசர் ஹம்தான் நட்சத்திரமோ, அப்படிப் பெண் குழந்தைகளில் ஷேக்கா மெஹ்ரா.

ஷேக்காவின் தாய் ஜோ கிரிகோரியோஸ், கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் அரசர் ,ஜோவை விவகரத்துச் செய்துள்ளார். இருப்பினும் ஷேக்கா மெஹ்ரா மற்றும் அவரது தம்பி அப்துல்லா பின் ராஷித் மக்தூம் இருவரும் துபாயில் உள்ள ஜபீல் அரண்மனையில் வளர்ந்து வந்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!