தீனி
தில்வாலே துல்ஹனியா பட வெளியீட்டுக்குப் பத்து நாள்கள் முன்பு ஒரு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்திருந்தனர். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பத்திரிகையாளர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அழைத்திருந்தார் யாஷ் சோப்ரா. படம் முடிந்ததும் மனோஜ் தேசாய் என்றொருவர் யாஷ் சோப்ராவிடம் சென்றார். ‘இது நின்று நீண்ட நாள் ஓடக்கூடிய குதிரை, வெற்றி நிச்சயம்’ என்றார்.
‘நீண்டநாள் என்பது சரி. அது நிற்காமல், அதுவும் எங்களுடைய திரையரங்கில் முப்பது ஆண்டுக்குள் மேல் ஓடக்கூடியது என்று அப்போது எனக்குத் தெரியாது’ என்கிறார் தேசாய். அவர்தான் மும்பை மராத்தா மந்திர் திரையரங்கின் உரிமையாளர்.
தில்வாலே அந்தத் திரையரங்கில் 1995 அக்டோபர் 20 அன்று தொடங்கிய ஓட்டம் இன்று வரை தொடர்கிறது. காலை 11:30 மணி காட்சி மட்டும் கடந்த பல வருடங்களாக ஓடுகிறது. ஆயிரமாவது வாரம் முடிந்ததும் பெரிய விழா எடுக்கப்பட்டது. அதோடு இந்தப் படத்தை நிறுத்திக் கொள்கிறோம் என்று நிர்வாகம் அறிவித்து, வெளியே போர்டும் வைத்து விட்டார்கள்.










Add Comment