பணம் சம்பாதிப்பதை, சொத்து சேர்ப்பதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை என்று தூக்கிப்போட்டுவிட்டு வந்தபிறகுதான் இன்னும் கூடுதலான பணம் அவரைத் தேடி வந்தது.
Tag - கோபால கிருஷ்ண கோகலே
சட்டப் படிப்பைப் பாதியில் நிறுத்தியது கோகலேவுக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது. பின்னாட்களில் அவர் விரும்பித் தேர்ந்தெடுத்த அரசியல் வாழ்க்கைக்குச் சட்ட அறிவு வலுவான அடித்தளமாக இருந்திருக்கும்.
மிகுந்த உழைப்பைக் கொட்டிப் பாடம் நடத்துவதால், கோகலேவின் வகுப்புகளை மாணவர்கள் மிகவும் விரும்பினார்கள், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கமாட்டாரா என்று ஏங்கினார்கள்.
மும்பையைவிடப் புனேதான் மராட்டியர்களின் அறிவு மையமாக, பண்பாட்டுத் தலைநகரமாகக் கருதப்பட்டது. மேற்கிந்தியாவின் மாற்றங்கள், புரட்சிகள், திருப்புமுனைகள் புனேவில்தான் தொடங்கின.
திலகருக்கும் ஆகர்கருக்கும் 'எல்லா இந்தியர்களுக்கும் குறைந்த செலவில் முறையான கல்வி' என்கிற கனவு எழுந்தது. புனேவில் ஒரு தனியார் பள்ளியைத் தொடங்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.
கோகலேவின் நண்பர்கள் சிலர் அவர் ICS ஆகவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், அதற்காக அவர் இங்கிலாந்துக்குச் சென்று ஒரு கடினமான தேர்வை எழுதித் தேர்ச்சி பெறவேண்டும்.
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் ஆங்கில விரிவுரைகளையும் ஹாவ்தார்ன்வைட்டின் கணக்கு விரிவுரைகளையும் கேட்ட கோகலே, அவர்களுடைய அறிவிலும், ஆங்கில மொழித்திறனிலும் வியந்து போனார்.
திலகர், ஆகர்கர் போன்றோரைப் பார்த்து நாட்டுக்காக எதையாவது செய்யவேண்டும் என்கிற ஆசை அவருக்குள் உருவாகியிருந்தது. அதன்மீது அமைச்சர் என்கிற முத்திரையைக் குத்திவிட்டார். அவ்வளவுதான்.
திலகரும் ஆகர்கரும் கோலாப்பூர் அரசருக்கு எதிரான சதியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர்களாக, அதற்காகப் பெரும் தியாகம் செய்த நாயகர்களாகக் கொண்டாடப்பட்டார்கள்.
கோகலே தன்னுடைய மேடைப் பேச்சுகள், அரசியல் உரைகளையெல்லாம் முன்கூட்டியே எழுதிவைத்துக்கொள்வது வழக்கம். ஆனால், அதைப் பார்த்துப் படிக்கமாட்டார், அப்படியே நினைவிலிருந்து பேசிவிடுவார்.













