‘எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்த இடம் சார் இது. தேவையில்லாமல் அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த ஆதாயத்திற்காக ஊதி பெருசாக்கிட்டாங்க. நாங்க பத்து வருஷமா வந்து போயிட்ருக்கோம். வந்தால் உடம்புக்கும் நல்லது. மனசுக்கும் திருப்தி. இந்த விவகாரம் ஆனதிலிருந்து கூட்டம் குறைஞ்சு போனதும் உண்மைதான்.’
இது மகாலிங்கம் என்பவரின் கூற்று. எழுபது வயதான இவர் தனது மனைவியுடன் மலையேறி வந்திருந்தார். கோவில் திறக்கும் வரை சுனை அருகில் சிலுசிலு காற்றில் அமர்ந்திருந்தவரிடம் பேசியபோது சொன்னதுதான் மேலே குறிப்பிடப்பட்டது.
‘கந்தர் மலை, இது சிக்கந்தர் மலையல்ல’ என்று சமீபத்தில் மதுரையில் ஒரு பிரச்சினை கிளம்பியது. அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலை மீது என்ன நடக்கிறது என்று சென்று நேரில் பார்த்து எழுதவும் என்றார் ஆசிரியர். வரும் திங்களன்று(14.07.2025) கும்பாபிஷேகம் நடக்கவிருப்பதால் ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளதா என்று கேட்டறிந்த பிறகு வண்டியை விட்டோம்.















Wonderful article, congratulation to the Author.