தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள மக்கள் உறைபனியினாலும் கடும் குளிரினாலும் தூக்கத்தைத் தொலைத்துப் பல மாதங்கள் இருக்கும். வீடு உள்ளவர்களுக்கு இந்த நிலை என்றால், போரில் அலைக்கழியும் மக்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம். ‘இதெல்லாம் விஷயமே இல்லை’ என்று சொல்வது போல, சென்ற திங்கட்கிழமை காலை 4:17 மணியளவில் 7.8 மற்றும் 7.6 ரிக்டர் அளவில் இரண்டு பூகம்பங்கள் தாக்கின. இதனால் பல ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக் கட்டிடங்கள் தரைமட்டமாயின. 1950க்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுதான். தொடர்ந்து வரும் செய்திகள் நமக்கு சொல்வது இதுவரை கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
மிகச்சிறப்பு, தொடர்க அரசியல் கட்டூரைகள். வாழ்த்துகள்.
pinangal eantu padethathum en nasikul eatho vasam muteyathu. Surunga sole vilanga vaithuvitergal