134. தீராப் பிணி
பிரசாதம் வாங்கி வரக் கோயிலுக்குச் சென்ற பாரதாய தத்தன் ஏன் இன்னும் திரும்பவில்லை என்று எண்ணியபடி, கோயில் இருந்த திசையையே நோக்கி அமர்ந்திருந்தான் சார்வாகன். புன்னகையுடன் எதிரே அமர்ந்திருந்த உதுமானி நாயனார்,
நான் ஒன்று சொன்னால் சினம் கொள்ள மாட்டாயே?
என்று கேட்டார்.
உங்களைச் சினந்து என்ன ஆகப் போகிறது? தாராளமாகச் சொல்லுங்கள்.
உன்னைக் காட்டிலும் பெருந்துறவி ஒருவன் இருக்கவே முடியாதென உன் தவத்தில் கண்டறிந்திருக்கிறாய். நியாயமாக நான் அதை முதலில் பாராட்ட வேண்டும். ஆனால் இப்போது நீ நடந்துகொள்வதைக் கண்டால், உன்னைக் காட்டிலும் ஒரு சிறந்த குடும்பியும் உலகில் இருக்க முடியாதென்று தோன்றுகிறது,
என்று சொன்னார்.
சார்வாகனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.











Add Comment