‘முருகா… எனக்கொரு வேலை கொடு முருகா!’ என்று தினமும் வேண்டிக்கொண்டிருந்தான் ஹார்லிக்ஸ் டப்பா.
ஒருநாள் அவன் முன்னால் திடீரென்று முருகப்பெருமான் தோன்றினார்.
‘நீங்க… உண்மையிலேயே முருகனா?’
‘ஆமாம்! உனக்கு ஏன் ஹார்லிக்ஸ் டப்பா என்று பெயர் வைத்தனர்?’
‘எங்க அப்பா ஹார்லிக்ஸ் டப்பாவெல்லாம் சேர்த்து வைப்பாரு. நான் அவருக்கு பொம்மை வாங்கித் தரச் சொல்லும்போது, ஹார்லிக்ஸ் டப்பா வைத்தே விளையாடச் சொல்வாரு. அதான் அப்படி பேரு வச்சுட்டாங்க!’
‘நீங்க… உண்மையிலேயே முருகனா?’, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான் ஹார்லிக்ஸ் டப்பா.
















Add Comment