இரானைக் குறிவைத்து தனது சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களுள் ஒன்றான ஆபிரகாம் லிங்கனை அரபிக் கடலில் நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா. இன்னும் பத்து கப்பல்கள் உடன் தயாராக நிற்கின்றன.
ஜோர்டானில் இருக்கும் தன் விமானத்தளத்திலும் போர்விமானங்களைத் தயார்நிலையில் வைத்திருக்கிறது அமெரிக்கா. போர் தொடங்குமானால், இரானுக்கு மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்படும்.
அமெரிக்காவின் நட்பு நாடுகளாக இருந்தபோதும், ‘இரானைத் தாக்குவதற்கு எங்கள் வான்வெளியைப் பயன்படுத்தக் கூடாது’ என சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் அமெரிக்காவிடம் தெரிவித்திருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டுகொள்வதாக இல்லை. வெனிசுவேலாவுக்கு அனுப்பியிருந்ததை விடக் கூடுதலான படைகள் இரானை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்கிறார்.















Add Comment