மீண்டும் டிரம்ப்
நடக்கவே கூடாதென்று உலகம் நினைத்தது நடந்தேவிட்டது!
47ஆவது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் திரும்பி வந்துவிட்டார். குற்றவாளி என நீதிமன்றம் நிரூபித்தவர் இப்போது உலகின் சக்திவாய்ந்த பதவியில் அமர்ந்திருக்கிறார். மக்கள் வாக்களித்துத் தீர்ப்பளித்துவிட்டார்கள். ஜூரிகள் எழுதிய தீர்ப்புக்கு மேலாக இது பெருவாரியான மக்களின் தீர்ப்பு.
‘வாக்குரிமையில்லாதவர்கள் கூட வாக்களிக்க வாய்ப்புள்ளது, கடவுளே வந்து வாக்குகளை எண்ணினால்தான் நான் வெற்றிபெறுவேன்’ என்றெல்லாம் டிரம்ப்பே சொன்ன தேர்தலில்தான் அவர் ஆரவாரமில்லாமல் அமைதியாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
தீவிரப் பழமைவாத சர்வாதிகார எண்ணம் கொண்ட ஒருவர் கட்டவிழ்த்துவிட்ட பொய்களையும் ஜோடனைகளையும் கேட்டும், அவர் குற்றவாளிதான் எனத் தெரிந்தும் மக்கள் அவரைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?















Add Comment