சென்னைப் புத்தகக் காட்சி, பொன்விழா ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாற்பத்தெட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருவதால், பொங்கல், தீபாவளிபோல ஒரு கலாசார நிகழ்வாக மக்கள் மனத்தில் நிலைப்பெற்று விட்டது. சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கடந்த சில ஆண்டுகளாகப் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அங்கும் ஆர்வத்துடன் மக்கள் வருகிறார்களா? எல்லா வகையான புத்தகங்களும் கிடைக்கின்றனவா? வசதிகள் எப்படி இருக்கின்றன? அங்கேயும் சென்னைப் புத்தகக் காட்சியிலும் மேம்படுத்த வேண்டிய வசதிகள் என்னென்ன? பதில்களைத் தெரிந்துகொள்ள, சில வெளியூர் எழுத்தாளர்களைத் தொடர்பு கொண்டோம்.
முதலில் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாலஜோதி இராமச்சந்திரனிடம் பேசினோம். இந்த ஆண்டு ஜீரோ டிகிரி நடத்திய நாவல் போட்டியில் இவரது கிடாத்தி நாவல் மூன்றாவது பரிசு பெற்றிருக்கிறது. பாலஜோதியின் சொந்த ஊர் புதுக்கோட்டை.















Add Comment