ரோஷனாரா பேகம். ‘குங்குமப் பொட்டின் மங்கலம்’ என்னும் சூப்பர்ஹிட் பாடலை எழுதியவர். முதல் இஸ்லாமியப் பெண் பாடலாசிரியர். 1968-ல் வெளியான ‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரண்டு பிற்கால முதல்வர்கள் நடித்திருந்தார்கள். கோயம்பத்தூரில் இருந்து சென்னை வந்து இவர் எழுதியது இந்த ஒரு பாடல்தான். வெற்றிகரமான அறிமுகமாக இருந்தாலும் தொடர்ந்து அவர் பாடல்கள் எழுதாததன் காரணம் தெரியவில்லை. இவரது பாடல் வெளியானதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே இறந்து போன டி.ஆர்.ராஜலஷ்மி தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். இவர் இயக்கிய ‘மிஸ் கமலா’ என்ற படம் 1936-ல் வெளியானது. நாடகத்தில் நடித்து பிறகு திரைப்படங்களிலும் நடித்தவர். முதல் பேசும் படமான காளிதாஸில் நடித்துள்ளார்.
இதைப் படித்தீர்களா?
வி கே ராமசாமி உள்ளிட்ட ஏழு பேருக்கு உதவியாக இருக்கட்டும் என்று எடுக்கப்பட்ட படம்தான் அருணாசலம். அதில் வந்த லாபத்தைப் பிரித்து அவர்களுக்குக்...
ரசிகர்கள் ஆர்ப்பரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார் ரஜினி. 'நான் ஒரு தடவ சொன்னா...' என்ற வசனம் பேசாத இளைஞர்கள் இருக்கவே முடியாது.















Add Comment