தமிழ்நாட்டின் தொழில் நகரமான கோவையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழகப் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஒன்பதாவது ஆண்டாகக் கோவை கொடிசியாவில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினரும் தொடங்கி வைத்தனர்.
இந்தப் புத்தகத் திருவிழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து பதிப்பாளர்கள் கலந்துகொண்டு தங்கள் புத்தகங்களைக் காட்சிப்படுத்தியிருந்தனர். இந்தாண்டு மொத்தம் 320 ஸ்டால்கள் கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. இது சென்ற ஆண்டை விட 15% அதிகம். மேலும், இந்தாண்டு சுமார் இரண்டு லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.















Add Comment