Home » தினம்
இலக்கியம் கதைகள்

தினம்

விமலாதித்த மாமல்லன்


‘நாளைக்கு வேலை இருக்கும். ஃபிரீயா வெச்சுக்குங்க.’ என்றார், ஏஓ டிடிஓ போனில் வந்த கிரிதர்.

நாய்க்கு வேலையில்லே நிக்க நேரமில்லே எனத் திரிந்து கொண்டிருக்கிற தானென்ன தனியாக ‘ஃப்ரீயாக’வைத்துக்கொள்வது, எப்போதுமே ஃப்ரீதானே என நினைத்துக்கொண்டே, ‘ஏசிக்கிட்ட…’ என்று இழுத்தான்.

‘அல்ரெடி பேசிட்டேன்.’ என்றார்.

நரஹரி ரிஸீவரை வைத்ததும்,

‘என்னங்க உங்க ஃப்ரெண்டு உங்க மாதிரியே இருக்காரு. சுதாகர் பேசறேன்னாரு. எங்க இருந்து பேசறீங்கன்னு கேட்டா பேங்குன்னாரு. எந்த பேங்குனு கேட்டா செண்ட்ரல் பேங்க்குங்கறாரு. எல்லாத்தையும் கேட்டுக் கேட்டுதான் தெரிஞ்சிக்கணுமா. இன்னார் இங்க இருந்து பேசறேன், இன்னார் கிட்டப் பேசணும்னு ரெக்வெஸ்ட் பண்ணிக் கேக்கிறதுதானே முறை’ என்றார் கல்லா பெட்டி சிங்காரம்.

குரலுக்காக மட்டுமின்றி, அவர்தான் அந்த அலுவலகத்தின் டிராயிங் அண்ட் டிஸ்பர்ஸிங் ஆபீஸராக இருந்தார் என்பதாலும் அவருக்கு, கல்லாப்பெட்டி சிங்காரம் என்று பெயர் வைத்திருந்தான் நக்கல் பிடித்த நரஹரி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!