அரசு வேலை என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. சில ஆயிரம் வேலைகளுக்குப் பல லட்சம் பேர் தேர்வு எழுதுவதால் இதில் வெற்றி பெறுவது எளிதான காரியமன்று. சரியான திட்டமிடல், தொடர் பயிற்சி, தேர்வு தவிர வேறு சிந்தனையன்றி உழைத்தால் பலனுண்டு. தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க வேண்டும். வீட்டில் தினமும் குறைந்தது ஐந்து மணி நேரமாவது படிக்கவேண்டும். கவனச் சிதறல் கூடாது. வரவேற்பறை, படுக்கையறையில் உட்கார்ந்து படித்தால் நெருக்கடிகளான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே, வீட்டிலேயே ஒரு படிக்கும் அறையையும் அதில் சிறிய அளவில் நூலகம் ஒன்றையும் அமைத்துக் கொள்ளுதல் சிறப்பு.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment