உலாவிக்குள் உல்லாலா
மால்வேர்களின் நோக்கம் திருட்டு. தகவல்களைத் திருடுவது. அதன் மூலம் பணம் சம்பாதிப்பது. இவ்வளவுதான் கதைச் சுருக்கம். மால்வேர் குடும்பத்தின் ஒவ்வொரு நபரும் தனக்கென்று ஒரு திருடும் வித்தையைக் கற்று வைத்திருப்பார்.
பிக்பாக்கெட் அடிப்பவர்கள் தங்களுக்குள் ஏரியா பிரித்து வைத்திருப்பார்கள் அல்லவா? அது போலத்தான் மால்வேர்களும். தங்களுக்கென்று ஒரு ‘கொல்லை எல்லை’ பிரித்து வைத்திருக்கும். அதற்குள் அவர்தான் தாதா.
அப்படியாக வங்கிகளைக் குறிவைத்துத் தாக்கிய மால்வேர் ஒன்றுண்டு. அதன் பெயர் ஜ்யூஸ் (Zeus). வங்கிகள் என்றால் நேரடியாக வங்கிகளுக்குச் சென்று கொள்ளையடிப்பது அல்ல. வங்கிகளின் கணினிகளைத் தாக்குவது இவருடைய கொல்லை எல்லை இல்லை.











Add Comment