புதிய பிரிட்டிஷ் பிரதமராக லிஸ் டிரஸ் பதவி ஏற்ற இரண்டாவது நாளே எலிசபெத் ராணி பரலோகம் போய் விட்டார். உலகமே அதிர்ச்சி அடைந்தது. என் பாட்டி உயிரோடு இருந்திருந்தால் இவள் வந்த ராசி ராணி போயிட்டா என்று சொல்லியிருப்பார். நான் அதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன். இது ஒரு இயற்கையான சம்பவம். புதிய பிரதமரின் வருகைக்கும் ராணியின் மறைவுக்குமான தொடர்பு காக்கை இருக்கப் பனம் பழம் விழுந்த கதை போன்றது தான். இரண்டு வாரம் நாடு முழுவதும் சோகமயம். யாரும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி ராணியை அடக்கம் செய்யும் வரை அக்கறை செலுத்தவில்லை.
இதைப் படித்தீர்களா?
தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை மூன்று ஆண்டுகளுக்குப்...
தரையில் விழுந்த ஆப்பிள் கையடக்க கம்ப்யூட்டர். டைப் செய்யத் தேவையில்லை. எழுதினாலே போதும். இப்படித்தான் அறிமுகமானது நியூட்டன். பெர்சனல் டிஜிட்டல்...













Add Comment