ஆமாம் என்றா சொன்னாய்?
ஏப்ரல் – 1983.
வலோத்யாவும் லூத்மிலாவும் காதலிக்கத் தொடங்கி மூன்றரை வருடங்கள் ஆகியிருந்தன. ஓர் இரவு அவரது இல்லத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அதுவே கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம். காதல் முடிவுக்கு வந்து அடுத்த நாளே அங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும் என்றது லூத்மிலாவின் உள்மனது. வலோத்யா சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
‘நான் எப்படிப்பட்டவன் என்று இப்போது உனக்குப் புரிந்திருக்கும். மற்றவர்களைப் போல என்னால் உனக்கு நேரம் ஒதுக்க முடியாது. அமைதியாக இருப்பேன். ஆனால் சில விஷயங்களில் திடீரென்று கோபப்பட்டுத் திட்டியும் விடுவேன். நான் ஒரு மோசமான வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். இந்நேரம் நீயே முடிவு செய்திருப்பாய்’ என்றார்.
தனது உள்மனது சொன்னது சரியே என்று நினைத்துக்கொண்டார் லூத்மிலா. அடுத்து வலோத்யா சொல்லப்போகும் காதல் முறிவுக்குத் தயாரானார்.
‘ஆமாம், நானும் முடிவு செய்துவிட்டேன்’ என்றார், கண்களில் கண்ணீரைத் தேக்கியபடியே.















Add Comment