சென்னை வாரத்தை முன்னிட்டு, அச்சுப்பண்பாடு- இதழ்கள் கண்காட்சி ஒன்றை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் கடந்த வாரம் நடத்தியது. இரு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வளர்ந்து வந்த அச்சுப்பண்பாடு பற்றிய தகவல்கள், கடந்த நூற்றாண்டில் வெளிவந்த பழைய அச்சு நூல்களின் கண்காட்சி, இந்தத் துறையில் விற்பன்னர்களின் பேச்சு முதலியவை இந்த ஒரு வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தமிழகத்தில் அச்சுப்பண்பாடு எப்போது தொடங்கியது? எப்போதிலிருந்து இதழ்கள் வரத்தொடங்கின? அது நம் பாரம்பரியத்தில் எங்ஙனம் மிக முக்கியமான ஒன்றாக மாறியது? விரிவாகப் பார்க்கலாம்.
தமிழில் எழுத்துருக்கள் உருவாகி வளர்ந்த வரலாறு மிகத் தொன்மையானது. அது பாறை ஓவியங்களில் காணப்படும் குறியீடுகளிலிருந்து தொடங்குகிறது. பிறகு பானைகள், ஓடுகள், கற்கள் ஆகியவற்றில் இடம் பெற்றிருந்த பிராமி எழுத்துக்களாகக் கிடைத்திருக்கிறது. அதிலிருந்து முன்னேறி வட்டெழுத்தாக மாறியிருக்கிறது. அங்கிருந்து வளர்ச்சியுற்று, கல்வெட்டுகளிலும், செப்புப் பட்டயங்களிலும் பதிக்கப்படத் தொடங்கியது. அதற்குப் பின்னர் பனை ஓலைகள் புழக்கத்திற்கு வந்தன. கிட்டத்தட்ட பதினாறாம் நூற்றாண்டு வரையில் இந்தப்பனை ஓலைகள் வழியான எழுத்துகள் மட்டுமே புழக்கத்திலிருந்தன. பின்புதான் அச்சு வரலாற்றின் காலம் தொடங்குகிறது.















Add Comment