27 நமக்கல் நாமக்கல் என்கிற பெயர், இரண்டு முதல் நான்கு வயதுவரை சேலத்தில் இருந்த சமயத்தில் அம்மாவின் புலம்பல் மூலமாகத்தான் அறிமுகமானது. சேலத்தில் இருக்கிறோம் என்றுதான் பெயரே தவிர, ஒரு எட்டு போய் நரசிம்மரையும் நாமகிரித் தாயாரையும் பார்க்கமுடியவில்லையே என்று அவள் புலம்பாத நாளே கிடையாது. மூன்று நான்கு...
Tag - சக்கரம்
26 போனோ வண்டியை எடுக்கப் பார்க்கையில் உதைத்து உதைத்துக் காலே போய்விட்டது. என்ன ஆயிற்று என வழிந்த வியர்வையைச் சுண்டிவிட்டுக்கொண்டபடி யோசித்தாள் சுஜாதா.
25 இருவர். மணப்பாறையிலிருந்து திருச்சி போகும் வழியில், இளவெயிலில் ரேலியை நிறுத்தி, வழக்கமாகக் கொடுக்கப்பட்டும் குசேலக் கொடையான அவில், பேப்பர் தட்டுகளில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
எந்த மாமல்லன் என்று அவர் கேட்பதற்குள்ளாக வந்து கதவைத் திறந்த இந்திரஜித், 'நீ உள்ளபோ. வெளக்கு இருக்கட்டும். நான் வெளிய பூட்டிக்கிறேன்' என்று கேட்டைப் பூட்டிக்கொண்டு இவனுடன் இறங்கினார்.
'இதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. பாபாவிடம் பேசுங்கள். அதற்கு வேண்டுமானால் நான் ஏற்பாடு செய்கிறேன்' என்ற கர்னல் ரேகே பாபாவிடம் அழைத்துச்சென்றார்.
ராஜபாளையத்தில் வந்து இறங்கிய உடனே, குளிக்கவேண்டும்போல் கசகசவென இருந்தது. தூறத்தொடங்கி அல்பாயுசாக நின்றுவிட்டிருந்த மழையின் புழுக்கமும் வேறு சேர்ந்துகொண்டது.
இரவு தங்கப்போவது அருவிகளுக்குப் பெயர் பெற்ற குற்றாலத்தில் என்று அத்துல் சொல்லிக்கொண்டிருந்ததில் அத்தனைப்பேருமே பரவசமாகிப்போனார்கள்.
கொல்லத்திலிருந்து புறப்பட வரிசையில் நிற்கையில், மூன்று நாள் கடந்து விட்ட தைரியமும் அதிகாலை இருட்டோடு சேர்ந்துகொள்ள, தன் இடத்தை விட்டு, குரங்குக் குல்லாவை மடித்து காதுவரை இழுத்துவிட்டுக்கொண்டு நின்றிருந்த சுதீர் ரவுத் அருகில் போய் நின்றுகொண்டான்.
ஆரம்பத்தில் தாடியைப் பார்த்து உன்னை மலையாளி என்றுதான் நினைத்தேன். ரோஜியிடம்கூடச் சொன்னேன். பிறகு நீ இங்கிலீஷ் பேசுவதை வைத்துக் கண்டிப்பாக மலையாளியில்லை என்கிற முடிவுக்கு வந்தேன் என்று சொல்லிச் சிரித்தான் ஜேம்ஸ். அவனுக்கு அருகில் வாட்டசாட்டமாக பாடிகார்ட் போல நின்றிருந்த ரோஜி சும்மா இளித்து மட்டும்...
18 இரு திருவனந்தபுரத்திற்குள் நுழைந்ததும் முதலில் தோன்றியது, நகுலன் எங்கே இருப்பார் என்பதுதான். அடுத்ததாக எழுந்தது, ஆ. மாதவன் கடை வைத்திருக்கும் சாலைத் தெரு எங்கே என்பது. எழுத்தாளர்களையாகத் தேடிப்போக நாமென்ன காவிகட்டிக்கொண்டா வந்திருக்கிறோம் என உள்ளூரச் சிரித்துக்கொண்டான். அனுபவம் தேடிப்...













