Home » சக்கரம்

Tag - சக்கரம்

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 73

73 நோ எஸ்கேப்  உயிர்போகும் அளவுக்கு சிரமத்தைக் கொடுத்த உனா ஏற்றம் ஹோஷியார்பூருக்கு இறங்கும்போது எதிர்பார்த்த அளவுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மலைப்பாங்கான புனலூரிலிருந்து சமதள செங்கோட்டைக்கு இறங்கியதைப்போலக் கிடுகிடுவென சரியாதது கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. கிண்டலடித்தாலும் பரவாயில்லை என்று...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 72

72 உனா   பஞ்சாப்பின் பகலே  டிசம்பர் மாத மெட்ராஸ் இரவைப்போல இருந்தது என்றால் இரவு ஏற ஏற அனந்த்பூர் ஸாகிப், அறைக்குள் கூட குளிரிற்று. அணிந்திருந்த பாரத் ஜோடோ பனியனுக்கு மேல், ஆபீஸில் சொன்னார்கள் என்று, சூளைமேடு ஹைரோடில் இருந்த போலீஸ்  சீருடைப் பொருட்கள் விற்கும் எம் வி ராமலிங்கம் அண்ட் கோவில்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 71

71 யுத்த பூமி   குயிக்ஃபிக்ஸ் லகாவ் என்று வழியில்  ஒருவர்  சொன்னதைக் குறிப்பிட்டு, ‘இவர்களுக்காக நாம் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து, பைத்தியக்காரர்கள் போல பாரத் ஜோடோ ஜோடோ பாரத் என தொண்டைத் தண்ணி வற்றக் கத்திக்கொண்டு ஊரூராய் போய்க்கொண்டிருக்கிறோம்’ என்று இவன்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 70

70 ஏ கே 47   சைக்கிள் ஓட்டுவதைப்போலவே தங்கியிருக்கும் இடத்திலிருந்து கூட்டம் பேசுவதும் இந்தியாவை இணைத்துக்கட்டு இயக்கத்தின் முக்கியமான காரியம். ஆனால் அன்று அம்பாலாவில் நடந்தது மக்களிடம் பேசுகிற கூட்டமில்லை. அப்படி இருந்திருந்தால் இந்தியில் பேசுவது நமக்கெதற்கு என்பதைப்போல, வந்த காரியத்தைப்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 69

69 ஸ்டென் கன்   ஸ்மார்ட் என்று சுந்தர ராமசாமியே சொல்லிவிட்டார் என்று இறுமாந்திருந்த நம்மை ஒரு ஆரஞ்சு பானம், இப்படி அடித்து வீழ்த்திவிட்டதே. கோல்ட் ஸ்பாட் என்கிற பெயர்கூடப் பதியாத அளவுக்கு அவ்வளவு மக்காகவா இருந்துகொண்டிருக்கிறோம். ஸ்மார்ட் என்கிற பேச்சு ராம் வீட்டில் இவர்கள் மட்டுமே இருந்தபோது...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 68

68 ஒழுங்கு   நேற்று மாலை தாஜ்மகாலில் எழுதிய கடிதத்தை இன்று விடியற்காலை மதுராவில் தபாலில் சேர்த்தேன். இந்தக் கடிதத்தை இப்போது எழுதுவேன் என்று ஒரு மணிநேரம் முன்புகூட நினைக்கவில்லை. வயிறு சரியில்லாத காரணத்தால் மதிய உணவு உட்கொள்ளவில்லை. சரி, டீ குடிக்கலாம் என்று வெளியில் சென்றேன். இப்போது...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 67

67 ஊர்சுற்றி    மதுரா போனதும் எல்லோரும் ஆக்ரா போய்விடுவார்கள் என்று எதிர்பார்த்ததாலோ என்னவோ, பரத்பூரிலேயே, ‘ரேலியை விட்டு யாரும் எங்கும் போகக்கூடாது’ என்ற பாபா ஆம்தே கடுமையாக எச்சரித்திருந்தார். அதைக் காற்றில் பறக்கவிட்டு, மதுராவிலிருந்து ஆக்ராவுக்கு ரயிலேறியது, பாதியில் விட்ட...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 66

66 ஊர்க்குருவி   வந்திருப்பது டூரில்லை என்றாலும் டூர் வந்திருப்பதாக மனதிற்குள்ளாவது ஒப்புக்கொள்வதே நியாயம் எனத் தோன்றிற்று. தொழுநோயாளிகளுக்காக 35ஆவது வயதில் ‘ஆனந்தவன்’னை ஸ்தாபித்து, அதன்பின்  சோம்னாத் என்கிற இடத்திலும் தொடங்கி, போதாதென்று இந்தியாவை இணைத்துக்கட்ட...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 65

65 தண்டுவடம்    ரேலி ஆரம்பித்தபோது இருந்த மனநிலை போகப்போகக் கொஞ்சம் கொஞ்சமாக இனம்புரியாத வகையில் மாறிக்கொண்டே வருவதைப் பார்க்க இது நாம்தானா என்று வியப்பாக இருந்தது. தேதி போட்டுக் கொடுக்கப்பட்டிருந்த நிட் இண்டியா பயணக் குறிப்புக் கையேட்டில் மகாராஷ்ட்டிராவின் பாதி வரைதான் எழுதப்பட்டிருந்தது...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 64

64 தாகம்   ராஜஸ்தான் வரவிருக்கிறது என்பதை உஜ்ஜய்னில் அடித்துக்கொண்டிருந்த வெயிலே சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. தகிப்பையும் மீறி கனவில்கூடக் கண்டிராத பாலைவனத்தைப் பாபா ஆம்தே புண்ணியத்தில் இன்னும் சில நாட்களில் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பில் பயங்கரக் குஷியாகிவிட்டது. பாலைவனம் ஒரே மணலாக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!