நீலக்கிளி, கொத்தாத நெல் ஒன்றன் அருகே சென்று கிக்கீ என்றது. அவன் அச்சத்தத்தைக் கேட்டான். கிளியின் குரலுக்கு, இப்போது வேண்டாம் என்று நெல்லுக்குள் இருந்து ஒலித்த பதிலை நான் மட்டுமே கேட்டேன்.
அவனைக் கோழை என்று எண்ண முடியவில்லை. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தோன்றியது. ஏனெனில் அவன் வாய் திறந்து வெளிப்பட்ட ஒவ்வொரு சொல்லும் திடமாக இருந்தது.
மொத்த சனக்கூட்டமும் ஒருநாள் சமயப் பித்தம் மேலோங்கி, அம்பரத்தை உருவி வீசிவிட்டு அம்மணமாக ஓடும். உன் சிவனும் எவனும் வந்து அன்றைக்கு உடுக்கையளிக்க மாட்டான்.