அரசியலுக்கு லாபமோ இல்லையோ, விஜய்க்கு வெற்றியோ தோல்வியோ, சினிமாவுக்கு இது மிகப்பெரிய சரிவு என்று வணிக வட்டாரங்கள் பேசத் தொடங்கின.
வசூல் சக்கரவர்த்தியாக இருந்த விஜய், அதையெல்லாம் ஒரு கணத்தில் தூக்கி எறிந்து விட்டுத் திரையுலகை விட்டு விலகுகிறேன், இனி எனது வாழ்க்கை மக்கள் பணியில் என்று அறிவித்தார்.













