ஷாரன் சதுரங்க விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். திறமையும் இருக்கிறது. தேசிய அளவில் விளையாடத் தேர்வாகி இருக்கிறார். போட்டிகளுக்கு அவரால் உடனே கிளம்பிவிட முடியாது. முதலில் ஷாரனின் அப்பா கிளம்பிப் போவார். தன் மகளின் சக்கர நாற்காலி உள்ளே வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பார். ஒன்றிரண்டு படிகள் என்றால்கூடப் பரவாயில்லை. இரண்டு மூன்று மாடிகள் என்றால் மிகவும் சிரமம். போட்டி நடக்கும் பெரிய ஹாலின் கதவு சிறியதாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். கழிவறைகள், அதன் கதவின் அளவு, அங்கே செல்வதற்கான வழி, லிஃப்ட் என எல்லாவற்றையும் சரிபார்த்த பிறகுதான் அவர் மகள் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment