ஷாரன் சதுரங்க விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். திறமையும் இருக்கிறது. தேசிய அளவில் விளையாடத் தேர்வாகி இருக்கிறார். போட்டிகளுக்கு அவரால் உடனே கிளம்பிவிட முடியாது. முதலில் ஷாரனின் அப்பா கிளம்பிப் போவார். தன் மகளின் சக்கர நாற்காலி உள்ளே வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பார். ஒன்றிரண்டு படிகள் என்றால்கூடப் பரவாயில்லை. இரண்டு மூன்று மாடிகள் என்றால் மிகவும் சிரமம். போட்டி நடக்கும் பெரிய ஹாலின் கதவு சிறியதாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். கழிவறைகள், அதன் கதவின் அளவு, அங்கே செல்வதற்கான வழி, லிஃப்ட் என எல்லாவற்றையும் சரிபார்த்த பிறகுதான் அவர் மகள் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
இதைப் படித்தீர்களா?
பூசை முடித்துவிட்டு அருமொழி திரும்பிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. சார்வாகன் இருந்த இடத்திலிருந்து கோயிலின் வாயில் தென்பட்டதே தவிர வேறெதுவுமே...
தளவாடப் பண்டாரக் கட்டடம் நூற்று எண்பத்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டன் எறிபத்தனின் திருவுண்ணாழிகையாக இருந்தது என்றெல்லாம் நீ விட்ட கதையையும்...















[…] மெட்ராஸ் பேப்பர் இதழில் வெளியான கட்ட…மார்ச் 1, அனைத்துலக சக்கரநாற்காலிகள் தினத்தை முன்னிட்டு என்னுடைய இணையதளத்தில் பதிவிட்டுள்ளேன். […]