Home » சென்னை

Tag - சென்னை

தமிழ்நாடு

ஒரு கட்டடமும் ஒரு கட்டண உரையும்

சென்னையின் பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றான விக்டோரியா அரங்கம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. பாரதியார், விவேகானந்தர், மகாத்மா காந்தி, கோபால கிருஷ்ண கோகலே, சர்தார் வல்லப் பாய் படேல் உள்ளிட்ட எண்ணற்ற ஆளுமைகள் உரை நிகழ்த்திய இடம் இது. மதராஸின் மகத்தான அடையாளங்களில் ஒன்றாக இருந்தது...

Read More
சுற்றுச்சூழல்

கடலுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்

புறாக்களின் கால்களில் ஓலைச்சுவடி அனுப்பியது சங்ககாலம். தூதுவர் மூலமும் கடிதங்கள் மூலமும் தகவல் சொல்லும் ஒரு காலமும் இருந்தது. இப்போது உலகமே மின்னஞ்சலிலும் மொபைலிலும் சேதி சொல்லும் காலமாகிவிட்டது. என்றாலும் உங்களுக்குக் கடிதம் எழுதும் ஆர்வம் இன்னும் மீதமிருந்தால் கடலுக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்...

Read More
தமிழ்நாடு

ஜில்லென்று ஒரு சென்னை

ஜனவரி முடிந்து விட்டது. சென்னைக்குக் குளிர்காலம் இன்னும் முடியவில்லை. மண்டையைப் பிளக்கும் வெயில். மழைக்காலத்தில் சாலையெங்கும் வெள்ளம். இவையெல்லாம் நமக்குப் பழக்கமானவை. குளிர்காலம் பெயருக்கு வரும், வந்த தடம் தெரியாமல் சென்றுவிடும். ஆனால் இந்த வருடம் அப்படியில்லை. வாடைக்காற்று வெடவெடவென உடலை நடுங்கச்...

Read More
புத்தகக் காட்சி

சென்னைப் புத்தகக் காட்சி: வாசகர் குரல்

இசை நிகழ்ச்சிகள், டெல்லி அப்பளம், ஜிகினா பலூன்கள் எனப் பொங்கல் தினத்தன்று சென்னை சங்கமம் நிகழும் இடத்தைப் போல இருந்தது நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. ஜனவரி எட்டாம் தேதி தொடங்கிய 49ஆவது சென்னை புத்தகக் காட்சி, 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று டைட்டில் கார்டு போடும்...

Read More
புத்தகக் காட்சி

அச்சில் இல்லாத புத்தகங்கள்

புத்தகக் காட்சி என்பது வெறும் அடுக்கப்பட்ட காகிதங்களின் தொகுப்பு மட்டுமல்ல. அங்கே அறிவுப்பசிக்கு இணையாக வயிற்றுப்பசியும், தத்துவங்களுக்கு இணையாக வாழ்வாதாரப் போராட்டங்களும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு நடக்கின்றன. காற்று குறைவாக இருக்கும் அரங்கத்தை விட்டு வெளியே வந்ததும் காற்றில் ஆடிக்கொண்டிருக்கும்...

Read More
குற்றம்

என்னதான் நடக்கிறது சென்னையில்?

நம்பியோ (Numbeo) என்னும் தரவுத்தளம் இந்தியாவின் பத்து பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பயனர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலான இக்கணக்கெடுப்புப் பட்டியலில் சென்னை எட்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் அரசு தரப்பைச் சார்ந்த NCRB (National Crime Records Bureau) வெளியிட்ட இந்தியாவின்...

Read More
விளையாட்டு

மாதவன் என்கிற மார்க்கண்டேயன்

ஒருவர் தனது எழுபதாவது வயதில் இன்னும் புரொஃபஷனல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஐம்பது ஓவரும் மைதானத்தில் நின்று விக்கெட்களும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் நம்புவீர்களா? தனிமனித விளையாட்டுகளில் கூட முதிர்ந்த வயதிலும் விளையாடி சாதனை படைத்தவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. மரியா...

Read More
தமிழ்நாடு

ஒன்றிணையும் சென்னை ரயில்கள்

சென்னையின் பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. மத்திய ரயில்வே துறையின் ஒப்புதலையடுத்து, இந்த இணைப்பு தொடர்பான நிபந்தனைகளும் விதிமுறைகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை பறக்கும் ரயில் சேவையைக் கட்டுப்படுத்தவுள்ளது...

Read More
வரலாறு

ஆகஸ்ட் 15, 1947 – மதராஸ்

இந்திய சுதந்தரம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்த ஆகஸ்ட் 15, 1947 அன்று சென்னை எப்படி இருந்தது? ஆனந்தச் சுதந்தரம் அடைந்துவிட்டோம் என்று அன்றைய மதராஸ் மாநகரும் கூத்தாடிக் கொண்டிருந்ததா? என்னென்ன நிகழ்ச்சிகள் நடந்தன? அப்போது வெளிவந்த பத்திரிகைகள் சிலவற்றின் மூலமும், அன்று சிறுவர்களாக இருந்து...

Read More
சுற்றுச்சூழல்

மூழ்குமா தரமணி?

சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU), வடகிழக்கு ஆசிய நாடுகளின் கடல்மட்ட உயர்வைக் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடல்மட்ட உயர்வின் காரணமாகப் பல ஆசிய நகரங்கள் மூழ்கி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தின் உயரம் அதிகரிப்பதாக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!