22. மேலும் கசப்பு
‘சுதாரக்’ இதழ் தொடங்கப்பட்டபிறகு, திலகருக்கும் ஆகர்கருக்கும் இடையிலான கருத்து மோதல்கள் இன்னும் வலுப்பெற்றன. இருவரும் அவரவர் இதழ்களில் தங்களுடைய நம்பிக்கைகளை அழுத்தமாக வலியுறுத்தியதுடன், மற்றவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி எழுதினார்கள்.
அதே நேரம், இதழியலில் தனிக்குடித்தனம் கண்ட இவர்கள் இருவரும் டெக்கன் கல்விக் கழகத்தில் (DES) கூட்டுக் குடித்தனம் நடத்தவேண்டியிருந்தது. இது பல சிக்கல்களை உண்டாக்கியது.
குறிப்பாக, DESன் மற்ற உறுப்பினர்களைப்பற்றித் திலகர் வரிசையாகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், ‘அவர்கள் வெளியில் வேலை செய்து சம்பாதிக்கிறார்கள், சொந்தமாகப் புத்தகம் எழுதிச் சம்பாதிக்கிறார்கள், இதழியலில், அரசியலில் ஈடுபடுகிறார்கள். இவையெல்லாம் நம் கழகத்தின் அடிப்படை நம்பிக்கைகள், இலக்குகளுக்கு முரணானவை’ என்றார்.











Add Comment